சமீபத்தில் ஆஸ்கார் விருதை பெட்ரா 'எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் , தமிழ்நாட்டில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் பராமரிப்பாளர்களாக பணியாற்றும் பொம்மன் பெள்ளி பற்றிய கதை. இந்த கதையை இயக்கியவர் திரு கார்த்திகி கொன்சால்வ்ஸ். தாயை பிரிந்த யானைகளை எவ்வாறு அவர்கள் பராமரித்து வளர்த்தார்கள் என்பதும் அந்த குட்டி யானைக்கும் இவர்களுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பு என்ன என்பதும் படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை பாராட்டும் வகையில் தமிழக முதலைமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பொம்மன் பெள்ளியை அழைத்து தலா 1 லட்சம் உதவி தொகையை வழங்கினார் . இந்த நிலையில் ஆஸ்கார் விருதுடன் பொம்மன், பெள்ளி இருக்கும் புகைப்படத்தை பிரபல ஓ.டி.டி தளம் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு "உலகம் முழுவதும் அன்பை பரப்பும் எலிபன்ட் விஸ்பரர்சுக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவையும் பகிர்ந்து உள்ளது.ஆஸ்கார் விருதுக்கு இருவரும் தகுதியானவர்கள் என்று பலரும் பதிவுகள் வெளியிட்டு வாழ்த்தி வருகிறார்கள்.
நடிகரும் , தயாரிப்பாளரும் ஆன சிவகார்த்திகேயன் கனா திரைப்படத்தில் தொடங்கி நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா , வாழ் , மற்றும் பல படங்களை SK புரொடக்ஷன் மூலம் தயாரித்து உள்ளார். இதனை தொடர்ந்து தனது நண்பரும் சகோதரர் என்று அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியை வைத்து கொட்டுக்காலி எனும் படம் தி லிட்டில் வேவ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்து வருகிறார் . இந்தப் படத்தை `கூழாங்கல்' படத்தின் மூலம் சர்வதேச கவனம் பெற்ற பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்த பரோட்டா சூரி , வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இனி வரும் காலத்தில் கதையின் நாயகனாக மட்டும் தான் நடிப்பாரா?
துபாயில் பணிபுரிந்துவிட்டு நாட்டிற்கு திரும்புகின்றனர் ஜான் டிசோசா, தத்தாத்ரே பாபர்டெகா. துபாயிலிருந்து மும்பையை நோக்கி சென்ற விமானத்தில் மது அருந்துவிட்டு சகா பயணிகள் மற்றும் பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டனர். ஓராண்டு துபாயில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்புவதை கொண்டாடும் விதமாக மது அருந்தியதாக இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் காலமானார். சுப்ரமணியனின் வயது (84). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.