பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து உறங்குவது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு நீண்ட பதிவையும் பதிவிட்டுள்ளார். "புதிய பெற்றோர்களே அனைவருக்குமே என்னுடைய எச்சரிக்கை எங்களது குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் அறையிலேயே படுக்க வைத்து கொண்டோம். புதிய பெற்றோர்களான எங்களுக்கு அவன் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது. ஆனால் இப்ராஹிம் வளர்ந்த பிறகும் கூட எங்களுடைய அறையிலேயே படுத்து உறங்குகிறான். அவனுக்கு தனி அறையும் கொடுத்துள்ளோம் ஆனாலும் எங்கள் அறையிலேயே தூங்குறதுக்கு பயன்படுத்திக் கொள்கிறான். என்னுடைய பூர்விகம் பாக்கிஸ்தான் எனது மனைவியின் பூர்விகம் வங்கதேசம் ஆகும். எங்களுக்கு நடுவில் படுத்திருக்கும் எங்கள் மகன் இப்ராஹிமுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளோம். பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் நடுவில் படுத்திருப்பதால் அவனை இந்தியா என அழைக்கிறோம். இந்தியா எனது வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது". என ஒமர் இசா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை நகைச்சுவையாக பதிவிட்டேன் என ஒமர் இசா தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரை, 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திவுருவ படத்திற்கு "முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி" ஆகியோர் மலர்தூவி செலுத்தினர். மேலும், சர்வோதய சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடையில் 7000 ரூபாயை திருடிக்கொண்டதும் இல்லாமல் கடைக்காரருக்கு "நான் பசியாக இருந்ததால் உங்கள் கடைக்கு சாப்பிட வந்தேன். காலில் அடிபட்டதால் பணம் தேவைப்பட்டது அதனால், கல்லாவில் இருந்து பணம் எடுத்துக்கொண்டேன் நீங்கள் ஏழை என்பதை புரிந்து உங்கள் ஆறுதலுக்காக இந்த ஒரு கடிதத்தை எழுதுகிறேன். போலீஸிடம் புகார் அளிக்க வேண்டாம் ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி" ஒரு கடிதமும் எழுதிவைத்துச் சென்ற திருடன்.