சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் பெரிதும் உதவியாக இருப்பது மின்சார ரயில் ஆகும். ஏனேனில் குறைந்த கட்டணத்தில் செல்லவும் விரைவாக செல்லவும் இந்த மின்சார ரயில்கள் பயன்படுத்த படுகின்றன. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ,கடற்கரை- வேளச்சேரி, மூர்மார்கெட் –அரக்கோணம், மூர்மார்கெட்-கும்முடிபூண்டி-சூலூர்பேட்டை ஆகிய இடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் எல்லாம் மக்களின் வருகையை மேலும் அதிகரிக்க ஏ சி பெட்டிகளை இணைக்க வேண்டும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது இந்த ஆலோசனையை ஏற்ற தெற்கு ரயில்வே 2 முதல் 3 ஏ.சி பெட்டிகளை மின்சார ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் கடற்கரையிலிருந்து திருமால்பூர் வரை செல்லும் ரயில்களிலும் மற்றும் சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்களிலும் இந்த ஏ.சி பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது மக்களின் வருகை வைத்தே பின் அணைத்து ரயில்களிலும் இணைக்கும் பணிகளை தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளனர். பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் இந்த ரயில்களுக்கான ஏ.சி பெட்டிகளை தயாரிக்கின்றன.
கடந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பால் விலை குறைப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, 44 ரூபாய் என நிர்ணயம்செய்யப்பட்டது. இது, 500 மி.லி., 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆவின் நிர்வாகம் கூறியவாறு இந்த விற்பனையால் ஏழு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது இதை காரணம் காட்டி, நேற்று முதல் பச்சைநிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு, 50 சதவீதம் சப்ளை குறைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் அனுப்பப்பட்டது. ஒரு வாரத்திற்குள் பச்சை நிற பால் பாக்கெட் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டீன்களுக்கு, 5 லிட்டர் பால் பாக்கெட் வழக்கம்போல இரவு நேரத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது, என ஆவின் நிருவாகம் கூறியுள்ளது
பொதுவாக குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் சீசன் நேரமாக இருக்கும் தமிழக்கத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் குளிப்பதற்காக ஆண்டுதோறும் வருவார் ஆனால் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சிமலையில் பேய்ந்து வரும் தொடர்மழையால் குற்றாலத்தில் தண்ணீர் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பழைய குற்றாலம் , ஐந்துதருவி , புலியருவி , சிறவிகளில் தண்ணீர் ஜோராக வந்துகொண்டிருக்கிறது அதனால் மக்கள் அனைவர்க்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட மாதம் அருவியில் குளிக்கமுடியாமல் இருந்தது அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய பாரமாகவே இருந்த நிலையில் இந்த செய்தி மிக முக்கியமான சந்தோசமான செய்தியாக அமைந்துள்ளது
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தான் அயலான். இவர் ஏற்கனவே இன்று நேற்று நாளை எனும் ஒரு தடவை ற்றவேல் திரைப்படத்தை இயக்கியவர் தற்போது தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங்க், பானுப்ரியா ,யோகிபாபு, கருணாகரன், பாலசரவணன் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் சிறப்பு அம்சமாக இப்படத்திற்கு இசைப்புயல் எ.ர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். ஒரு பான்டஸி அளவிலான கதைக்களத்தை கொண்ட இப்படம் பலபொருட் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.2018 ஆம் தொடங்கப்பட்ட இப்படம் சிஜி, விஎப்எக்ஸ் காரணமாக நீண்டநாள் படத்தின் தகவல் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இப்படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்கத்தின் ஆஃபிஸில் த்விட்டேர் பக்கத்தில் நாளை ஒரு அற்புதமான ஆச்சரியத்திற்கு தயாராகுங்கள் என பதிவிட்டிருக்கிறது.